Friday, September 18, 2009

ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு . உலகளவு உவகை! தினமணி தலையங்கம்:



இதனினும் இனியதொரு செய்தி இருக்க முடியாது. 14 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு கோவையில் நடைபெறும் என்கிற அறிவிப்பு உண்மையிலேயே தேன்வந்து காதில் பாய்ந்த உணர்வை ஏற்படுத்துகிறது.

இப்போது பாரதி இருந்திருந்தால் துள்ளிக் குதித்திருப்பார். பாரதிதாசன் வாழ்ந்திருந்தால் வாழ்த்தி மகிழ்ந்திருப்பார். தவத்திரு தனிநாயகம் அடிகள் கேட்டிருந்தால் பேருவகை அடைந்திருப்பார். இந்த ஒரு செய்தியைக் கேட்கத்தானே தமிழ் நெஞ்சங்கள் ஒரு மாமாங்கமாகத் துடித்தன.

உலகத் தமிழ் மாநாடு என்பது தவத்திரு தனிநாயகம் அடிகளின் எண்ணத்தில் மலர்ந்த அற்புதமான விஷயம். 1964-ம் ஆண்டு தில்லியில் அகில உலகக் கீழ்த்திசை ஆய்வு மாநாடு ஒன்று நடந்தது. அதற்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மொழி வல்லுநர்கள் வந்திருந்தனர். அந்த அறிஞர் கூட்டத்தில் தமிழ் மொழியின் சார்பில் கலந்து கொள்ள பிரான்ஸ் நாட்டிலிருந்து ஜுன்பிலயோசா, இங்கிலாந்திலிருந்து டி. பர்ரோ, நெதர்லாந்திலிருந்து எல்.பி.ஜே. கைப்பர், ஜெர்மனியிலிருந்து ஹெர்மன் பெர்கர் போன்றோருடன் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், மு. வரதராசனார், வ.அய். சுப்பிரமணியம் மற்றும் தனிநாயகம் அடிகளார் போன்றோரும் இருந்தனர்.

அப்போது, தமிழுக்கென்று உலக மாநாடு ஒன்று நடத்த வேண்டும் என்கிற தனது எண்ணத்தைத் தவத்திரு தனிநாயகம் அடிகளார் வெளிப்படுத்தியது மட்டுமன்றி செயல்படுத்தவும் செய்தார். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கப்பட்டதன் பின்னணி அதுதான். தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால்தான் முதல் தமிழ் மாநாடு 1966-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் நாள் கோலாலம்பூரில் கோலாகலமாகத் தொடங்கியது.

அந்த முதலாம் உலகத் தமிழர் மாநாட்டுக்கு முதல்வர் பக்தவத்சலம் மட்டும் செல்லவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இரா. நெடுஞ்செழியனும், தமிழரசுக் கட்சித் தலைவரான ம.பொ. சிவஞான கிராமணியாரும் ஏனைய தமிழறிஞர்களுடன் கலந்துகொண்டனர். இரண்டாண்டுக்கு ஒருமுறை இதேபோல உலகத் தமிழ் மாநாடு தொடர்ந்து நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டபோது 1968-ம் ஆண்டு நடைபெற வேண்டிய இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்த அன்றைய முதல்வர் பக்தவத்சலம் ஏற்றுக்கொண்டு உறுதி அளித்தார்.

1968-ல் காங்கிரஸ் ஆட்சியை இழந்தபோதும், பக்தவத்சலத்தின் உறுதிமொழியை அரசியல் பாராட்டி உதாசீனப்படுத்தாமல் சி.என். அண்ணாதுரை தலைமையில் அமைந்த திமுக ஆட்சி நிறைவேற்ற முன்வந்தது. அதுமட்டுமல்ல, அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமனின் முழு ஒத்துழைப்பும் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக்கு இருந்தது. அவரே ஒரு கருத்தரங்கத்துக்குத் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர்கள் கு. காமராஜும், பக்தவத்சலமும் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். கட்சி மனமாச்சரியங்களை மறந்து "தமிழ்' என்கிற பெயரில் அனைவரும் அண்ணாவுடன் கைகோர்த்து நின்று அந்த இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை வெற்றியடையச் செய்தது தமிழர்தம் சரித்திரத்தில் அழியா நினைவு!

கடந்த உலகத் தமிழ் மாநாடு தஞ்சையில் நடந்து முடிந்து 14 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு ஆராய்ச்சிகள், ஆய்வேடுகள், அடுத்த தலைமுறை தமிழறிஞர்களின் பங்களிப்புகள் என்று மொழி வளம் பெற்றிருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இதுபோல உலகளாவிய தமிழ் ஆராய்ச்சிக்கு ஒரு பொதுமேடை கிடைத்தால் மட்டுமே, ஆரோக்கியமான தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

தவத்திரு தனிநாயகம் அடிகளை இந்தவேளையில் நினைவுகூராமல் இருக்க முடியவில்லை. முதல் நான்கு மாநாடுகளைச் சிறப்பாக நடத்திய பெருமைக்குரியவர் அவர். சிங்கள ஆதிக்கம் அதிகரிப்பதையும், அதனால் இலங்கையில் தமிழர்கள் இன்னலுறுவதையும் பொறுக்காத தனிநாயகம் அடிகள், இலங்கை அரசுக்கு எதிராகக் கருத்துகளை வெளியிட்டார். அதனால் அரசு அவரை காவல், கண்காணிப்பு என்று பயமுறுத்த எத்தனித்தது. உடனே, கொழும்புப் பல்கலைக் கழகத்தில் தான் தங்கியிருந்த அறையைக் காலி செய்துவிட்டுத் தமிழகம் வந்துவிட்டார் தனிநாயகம் அடிகள். அதன் பிறகு அவரது வாழ்க்கை தமிழ், தமிழ் மொழி என்பதாகவே கழிந்தது.

ஒரு மொழிக்காக உலகளாவிய மாநாடு நடத்தும் முதல் முயற்சிக்குச் சொந்தக்காரர் தவத்திரு தனிநாயகம் அடிகள்தான். உலகிலேயே தமிழ் மொழிக்கு உலகளாவிய மாநாடு நடத்தப்பட்டதற்குப் பிறகுதான் சம்ஸ்கிருதம், இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளுக்கு மாநாடுகள் நடந்தன.

ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாடு நடக்கும்போது, அந்தத் திடல் தவத்திரு தனிநாயகம் அடிகளின் பெயரால் வழங்கப்பட வேண்டும். அங்கே ஆய்வரங்கம் சமீபத்தில் இறைவனடி சேர்ந்த வ.அய். சுப்பிரமணியம் பெயரால் அமைய வேண்டும். மாநாட்டுப் பந்தல், நூற்றாண்டு விழா கண்ட அறிஞர் அண்ணாவின் பெயர் தாங்கி இருத்தல் வேண்டும். இவையெல்லாம் "தினமணி' சார்பில் முதல்வருக்கு வைக்கும் கோரிக்கைகள்.

தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு சரித்திர நிகழ்வு நடைபெற இருக்கிறது. உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழ்ச் சமுதாயத்தின் ஒட்டுமொத்தப் பார்வையும் தங்களது தாயகமான தமிழகத்தின்மீது குவிய இருக்கிறது. இந்த நேரத்தில் அரசியல் மனமாச்சரியங்களை விடுத்து 1966-லும், 1968-லும் இருந்த தமிழ் உணர்வுடன் கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்பது எதிர்க்கட்சியினருக்கு "தினமணி' விடுக்கும் வேண்டுகோள்.

14 ஆண்டுகளுக்குப் பிறகு, சோர்ந்து போயிருக்கும் தமிழனுக்கும், துவண்டு கிடக்கும் தமிழுணர்வுக்கும் புத்துயிர் ஊட்டும் விதமாக ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடத்த முன்வந்திருக்கும் முதல்வர் கருணாநிதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழ்கூறு நல்லுலகின் சார்பாக முதல்வருக்கு நன்றி... நன்றி... நன்றி
!

கடைசி 5 நாட்களில் 20,000 தமிழர்கள் படுகொலை-தமிழ்ப் பெண் தகவல்

Tamilvani
தமிழ்வாணி ஞானக்குமார்
லண்டன் வன்னிப் போரின் கடைசி ஐந்து நாட்களில் மட்டும் 20 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று சம்பவத்தின்போது அங்கு இருந்து தற்போது லண்டன் மீண்டுள்ள தமிழ்ப் பெண் தமிழ்வாணி ஞானக்குமார் என்பவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் தமிழ்வாணி ஞானக்குமார். இவரும், இவரது குடும்பத்தினரும் கடந்த 1994-ம் ஆண்டுஇங்கிலாந்து்கு குடி பெயர்ந்தனர். இவர் கிரீன்விச் பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவப் படிப்பு படித்துள்ளார்.

திருமண வாழ்க்கை கசந்ததால் லண்டனிலிருந்து புறப்பட்டு கொழும்பு வந்த தமிழ்வாணி பின்னர் வன்னிக்குச் சென்றார்.

அந்த சமயத்தில் அங்கு புலிகளுக்கும், இலங்கைப் படைகளுக்கும் இடையிலான போர் உக்கிரமடைந்திருந்த நேரம். அப்பாவித் தமிழர்கள் பலர் படுகாயமடைந்து தவித்ததை நேரில் பார்த்த தமிழ்வாணி அங்கேயே தங்கியிருக்க முடிவு செய்தார்.

இலங்கை ராணுவம் தொடர்ந்து முன்னேறி வந்ததால், சுமார் 3 லட்சம் மக்களும் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே அங்கிருந்த தமிழ் வாணி காயமடைந்த மக்களுக்கு உதவி செய்யமருத்துவமனை்குச் சென்றார். அங்கும் குண்டு வீசப்பட்டது. இதில் 50 பேர் பலியாயினர்.

கடைசியாக நடந்த தாக்குதலின்போது லட்சக்கணக்கான மக்களுடன் சேர்ந்து தமிழ்வாணியும் அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டார். 4 மாதங்கள் கழித்து சமீபத்தில் அவர் விடுவிக்கப்பட்டார்.

தற்போது லண்டன் திரும்பி விட்ட தமிழ்வாணி, கார்டியன் இதழுக்கு பேட்டி அளித்துள்ளார். கடைசி நாட்களில் நடந்தவை குறித்து அவர் உருக்கத்துடன் விவரித்துள்ளார்.

கார்டியன் செய்தியிலிருந்து சில பகுதிகள்...

தன் குழந்தையை இறுக்க அணைத்தபடி ஒரு இளம் தாய் வீதியோரமாக நின்றுகொண்டிருக்கிறாள். அந்தக் குழந்தை இறந்துவிட்டது.

அந்தத் தாய் ஒரு முடிவு எடுப்பதற்குத் தவித்துக் கொண்டிருக்கிறார் என்பதை தமிழ்வாணி ஞானகுமார் பார்த்தார். அவர்களைச் சுற்றிலும், வீதியெங்கும் சிதறிக் கிடக்கும் மனித உடலங்களுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு வழி தேடி நடந்து கொண்டிருக்கிறார்கள்.

வீதி ஓரமாக ஒரு தாய் தனது குழந்தையை இறுகப்பிடித்தபடி நின்றுகொண்டிருந்தார். குழந்தை இறந்து போயிருந்தது. அந்தக் குழுந்தையை தாயால் எடுத்துவர முடியாது. அதை அப்படியே விட்டுவிட்டு வரவும் அந்தத் தாய் விரும்பவில்லை. என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை.

லட்சக்கணக்கான மக்கள் விரைவாக வெளியேறியபடியும் ஒவ்வொருவரையும் வெளியேற்றியபடியும் இருந்த அந்த நிலையில், இறுதியில், வீதியோரமாக அந்தக் குழந்தையைப் போட்டுவிட்டு அவளும் வெளியேறிச் சென்றாள். அந்த உடலத்தை அங்கு விட்டுவிட்டுத்தான் அவள் வரவேண்டியிருந்தது. அவளுக்கு வேறு வழி எதுவும் இல்லை.

"அப்போது நான் சிந்தித்தேன், இந்த மக்கள் என்ன தவறு செய்தார்கள்? ஏன் அவர்கள் இப்படிப்பட்ட துன்பங்களைச் சுமக்கிறார்கள்? அனைத்துலக சமூகம் ஏன் அவர்களுக்காகப் பேச மறுக்கிறது? நான் இப்போதும் அந்தக் கேள்விகளைக் கேட்கிறேன்."

இலங்கையின் வடக்கு-கிழக்கில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதியில் இருந்தமருத்துவமனைளில் இருந்து தமிழ்வாணி கடைசியாக வெளி உலகுடன் பேசி இருந்தார்.

இறுதியில் விடுதலைப் புலிகளை ஒடுங்கிய நிலப் பிரதேசத்திற்குள் நெருக்கிச் சென்ற அரச படையினர், லட்சக்கணக்கான தமிழ் மக்களை அகதிகளாகப் பிடித்துச் சென்றனர். அந்தப் பேரவலத்திற்குள் தமிழ்வாணி இருந்துள்ளார். எறிகணைக் குண்டுமருத்துவமனைமீது வீழ்ந்து வெடித்து பலரைப் பலிவாங்கியது. "அந்தத் தருணம் நரகம் போன்றது" என்கிறார் தமிழ்வாணி.

காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளையும் போர் நடைபெறும் இடங்களுக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பது பற்றி அங்கிருந்து அவர் வெளி உலகிற்குத் தகவல்களையும் சொல்லி வந்த, அங்கிருந்த சிறிய மருத்துவக் குழுவில் ஒருவராக தமிழ்வாணி இருந்துள்ளார்.

அவரைச் சுற்றி ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துகொண்டிருந்தபோது தனது உயிரை இழக்காமல் தமிழ்வாணி ஒருவாறு பாதுகாத்துக் கொண்டார்.

மண்ணிற்குள் தோண்டப்பட்ட பதுங்கு குழிகளுக்குள் இரவுகளில் காலத்தைக் கழித்துள்ளார். பகல் பொழுதுகளில், இடம் மாறிக் கொண்டிருந்தமருத்துவமனைளில் பணியாற்றிக் கொண்டிருந்தார். கசாப்புக் கடைக்காரனின் கத்தியைக் கொண்டும் தண்ணீர் கலக்கப்பட்ட மயக்க மருந்தைக் கொண்டு மருத்துவர்கள் சத்திர சிகிச்சை மேற்கொள்ள முயன்று கொண்டிருந்த சமயத்தில், வீழும் எறிகணைகளாலும் குண்டுகளாலும் அங்கு பலர் காயமடைந்தும் இறந்தும் கொண்டிருந்தனர்.

ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து இப்போது அவர் தெரிவிக்கும் தகவல்கள், பொதுமக்களின் ஒரு துளி ரத்தம் கூடச் சிந்தாமல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்டதாக அதிபர் ராஜபக்சே தெரிவித்திருப்பதற்கு எதிரான வலுவான ஆதாரங்களாக இருக்கின்றன.

தமிழ்வாணி 1984 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். அவரும் அவரது குடும்பத்தினரும் 1994 ஆம் ஆண்டில்இங்கிலாந்து்கு இடம் பெயர்ந்தனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் நாள் வரைக்கும் அவர் அங்கு திரும்பிச் சென்றிருக்கவில்லை. கிரீன்விச் பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவ பட்டப் படிப்பை அவர் முடித்திருக்கிறார்.

ஆனாலும், அவரது திருமண வாழ்க்கை இயல்பானதாக அமையவில்லை. அதனால் அதனை முறித்து விடுவதற்கான நேரம் வந்துவிட்டது என அவர் தீர்மானித்தார். தான் எங்கு செல்கிறேன் என்ற விபரத்தை யாரிடமும் தெரிவிக்காமல் வீட்டை விட்டுப் புறப்பட்டார்.

கொழும்பை வந்தடைந்த அவர் அங்கிருந்து புறப்பட்டு தனது உறவினர்களுடன் வசிப்பதற்காக வன்னிக்குச் சென்றார். அவருக்கு ஒரு சகோதரரும் இரு சகோதரிகளும் லண்டனில் இருக்கிறார்கள்.

வன்னியில் ஆபத்துக்கான சில அறிகுறிகள் தெரிந்தன. ஆனாலும் 2008 ஆம் ஆண்டு ஜூலையில்தான் சண்டைகள் மிக மோசமாகின. அரசுடன் பேச்சுக்களை நடத்தலாம் என புலிகள் தொடர்ந்து எண்ணி வந்தனர். அதைத்தான் அவர்கள் கடந்த காலங்களிலும் செய்தனர். ஆனால், புலிகளை அடியோடு அழித்துவிடுவது என்ற திட்டத்தை அரசு கொண்டிருந்தது.

இந்தச் சண்டையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் அங்கேயே தங்கி இருப்பது என தமிழ்வாணி தீர்மானித்தார்.

அரசின் தரைப் படையினர் அவர்களை எட்டுவதற்கு முன்னர் அப்பகுதி முழுவதும் தொடர்ச்சியான வானூர்தி குண்டு வீச்சுக்கள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால், ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் கனரக எறிகனைகளில் ஆக்ரோசமான தாக்குதல்கள் தொடங்கின. அது மக்களை தமது இடங்களைவிட்டு நகரும்படி நிர்ப்பந்தித்தது.

"மழை பெய்துகொண்டிருந்தது. அத்துடன்........ வீதி முழுவதும் தண்ணீருடன் சேர்ந்து இரத்தமும் உடலங்களும் ஆறாய் ஓடியதைப் பார்க்க முடிந்தது. அந்த உடலங்கள் அங்கேயே விட்டுச் செல்லப்பட்டிருந்தன. யார் இறந்தார்கள் யார் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை யாராலும் அடையாளப்படுத்த முடியவில்லை.

உடலங்கள் அத்தனையும் தரையில் அப்படியே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. முதல் தடவையாக நான் உடலங்களையும் அழுதுகொண்டும் கத்திக்கொண்டும் இருந்த காயப்பட்ட மக்களையும் நான் பார்த்தேன்."

மக்கள் எங்கு நிற்கிறார்களோ அங்கே உடனடியாக ஒரு பதுங்கு குழிகளை உருவாக்கினார்கள். குறைந்தபட்சம் ஒரு மனிதன் நின்றுகொண்டிருக்கக் கூடியளவு மண்ணில் துளை தோண்டிக்கொண்டார்கள். பனை மரங்களை வெட்டி அந்தக் குழிகளின் மேலே அடுக்கினார்கள். அதற்கு மேலேயும் அருகிலேயும் மண் மூட்டைகளை அடுக்கினார்கள்.

ராணுவம் முன்னேறத் தொடங்கியதும் சுமார் 3 லட்சம் மக்களும் இடம்பெயரவேண்டி ஏற்பட்டது. தமிழ்வாணி அங்கிருந்தமருத்துவமனை்கு உதவிகள் புரிவதற்காகச் சென்றார். முன்னாள் ஆரம்பப் பாடசாலை ஒன்றிற்கு அது இடம்மாறி இருந்தது. முதலுதவிகளை வழங்குவது மற்றும் காயங்களுக்குக் கட்டுப்போடுவது போன்ற பணிகளில் ஈடுபடுவது அவரது நோக்கமாக இருந்தது.

தமிழ்வாணியின் பட்டப் படிப்பு இதற்கான எதனையும் அவருக்குச் சொல்லிக் கொடுத்திருக்கவில்லை. நேரடியாக அவற்றைச் செய்வதன் மூலமே அவர் அவற்றைக் கற்றுக்கொண்டார். சண்டை கடுமையானதும், அந்த இரண்டு அறைகளை மட்டுமே கொண்ட தற்காலிகமருத்துவமனைில் ஒவ்வொரு நாளும் 500 பேருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

"அவர்களுக்கு மருந்துப் பொருட்களின் பற்றாக்குறை இருந்தது. ஆனால் எப்படியோ அவர்கள் சில உயிர்களைக் காப்பாற்றினார்கள். கடைசி இரண்டு வாரங்களும் அதற்கு மேலும் எல்லாவற்றிற்குமே பற்றாக்குறை இருந்தது."

ஏற்றிய ரத்தமும் சேர்ந்து வெளியேறிக் கொண்டிருக்க, நோயாளியிடம் இருந்து என்ன கிடைக்கிறதோ அதைக் கொண்டு காயத்திற்குக் கட்டுப்போட வேண்டிய நிலையில் அவர் இருந்துள்ளார். அவர்களின் நரம்புகளில் திரும்பவும் ரத்தம் ஏற்றுவதற்கு முன்னர் அவர் அதனைச் செய்ய வேண்டி இருந்தது. மயக்க மருந்து பற்றாக்குறையாகிக் கொண்டிருந்த நிலையில் அதனுடன் சுட வைத்து ஆறிய தண்ணீரைக் கலந்து கொடுத்தார்கள்.

"ஆறு வயதுச் சிறுவனுக்கு சிகிச்சை செய்யும்போது நான் பார்த்தேன். அவர்கள் அவனது ஒரு காலையும் கையையும் எடுக்க வேண்டி இருந்தது. ஆனால் அவர்களிடம் அதற்கான சரியான உபகரணங்கள் இருக்கவில்லை. இறைச்சி வெட்டுவதற்குப் பயன்படும் கத்தி மட்டுமே அவர்களிடம் இருந்தது. அதனைப் பயன்படுத்தி, அந்தச் சிறுவன் கதறக் கதற அவனது காலையும் கையையும் வெட்டி எடுத்தார்கள்.

படையினர் நெருங்கி வந்தபோது நிலைமை இன்னும் மோசமானது.

"எறிகணைக் குண்டுகளிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் ஓடினார்கள் ஓடினார்கள் ஓடிக்கொண்டே இருந்தார்கள். ஆனாலும் அவர்களால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் நாங்கள் எல்லோருமே இறந்துவிடப் போகின்றோம் என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டது.

தொடர்ந்தும் அங்கு உயிருடன் இருப்பதற்கான வழிகள் ஏதும் இருக்கிவில்லை. நான் இங்கே இப்போது உயிருடன் இருப்பேன் என்று நினைத்திருக்கவே இல்லை. நான் சொல்லிக் கொண்டேன், சரி, நான் சாகப்போகிறேன், இதுதான் இறுதி முடிவு என்று.

"ஒரு நாள் நான் அறுவைச் சிகிச்சைக் கூடத்திற்குள் இருந்தேன். அடுத்த அறை குண்டுத் தாக்குதலுக்கு உள்ளானது. அந்த அறையில் மருத்துவர்களின் கண்காணிப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல நோயாளிகள் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் அந்தக் குண்டுவீச்சில் இறந்துபோனார்கள். அவர்கள் (ராணுவத்தினர்) மீண்டும் எறிகணைத் தாக்குதல்களைமருத்துவமனைமீது நடத்தினார்கள். இதில் ஒரு மருத்துவர் இறந்து போனார்."

அந்தமருத்துவமனைில் ஓய்வு ஒழிச்சலே இருக்கவில்லை. தனது குழந்தையை அணைத்தபடி காயமடைந்த நிலையில் கொண்டு வரப்பட்ட ஒரு தாயை தமிழ்வாணியால் என்றுமே மறக்கமுடியாது.

"தனது குழந்தையை அவர் மடியில் வைத்திருந்தார். அந்தக் குழந்தை இறந்திருந்தது. ஆனால் அந்தத் தாய்க்கு அது தெரியாது. குழந்தை இறந்தது பற்றி இப்போது அவரிடம் சொல்ல வேண்டாம், ஏனெனில் விஷயம் தெரிந்தால் தாய் அழுது, கூப்பாடு போடுவார் அத்துடன்.... நாங்கள் அந்தத் தாயை முதலில் காப்பாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.

அதனால் நாங்கள் அந்தத் தாயிடம் கூறினோம், சரி நீங்கள் உங்கள் குழந்தையை எங்களிடம் தாருங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் சென்று மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள் என்று. சிகிச்சை முடிந்த பின்னரே அவரிடம் நாங்கள் குழந்தை இறந்துபோய் விட்டது என்ற உண்மையைச் சொன்னோம். என்னால் இப்போது இலகுவாகச் சொல்லிவிட முடிகின்றது. ஆனால், அந்தத் தருணத்தில் நான் பெரும் வேதனையை அனுபவித்தேன். அது ஒரு அப்பாவிக் குழந்தை. அது இறந்தது கூடத் தெரியாத தாய். குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது என நினைத்துக் கொண்டிருந்தாள் அந்தத் தாய்."

"இது போன்ற பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஒரு சமயம் தாய் இறந்து போயிருந்தார். அது தெரியாமலேயே அவரது குழந்தை அவர் மார்பில் பால் குடித்துக் கொண்டிருந்தது."

சண்டை இன்னும் இன்னும் நெருக்கமாக வந்தபோது, கைகளில் என்ன கிடைத்ததோ அவற்றையே அவர்கள் உண்டார்கள். தூங்க முடிந்தவர்கள் கிடைத்த இடங்களில் தூங்கினார்கள்.

"எப்போதும் ஓடுவதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் ஓய்வாக இருந்து தூங்குவதற்குச் செல்ல முடியாது. எந்த நிமிடத்திலும் அந்த இடத்தைவிட்டு அகல்வதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்."

மே மாதம் 13 ஆம் நாள்மருத்துவமனைகுண்டுத் தாக்குதல்களுக்கு உள்ளானபோது அங்கிருந்த 50 பேர் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் தமிழ்வாணிக்கு அங்கு வேலை இருக்கவில்லை.

"எங்களுடைய பதுங்குகுழிக்கு அடுத்ததாக இருந்த குழியின் மீது குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர்.

"நான் அவர்களைப் பார்த்தேன்.......... திடீரென மக்கள் கதறி அழும் சத்தம் கேட்டது. நான் நினைத்தேன் இது எங்கோ எமக்கு மிக அருகில் என்று. ஆனால் நான் அந்த இடத்தை கற்பனை பண்ணிக்கூடப் பார்க்கவில்லை. அந்த இடம் முழுவதும் ரத்தக் கறையாகக் கிடந்தது. உடலங்கள் எல்லா இடங்களிலும் துண்டுதுண்டாகச் சிதறிக் கிடந்தன. என்னுடைய சகோதரன் சொன்னான், எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு இந்த இடத்தைவிட்டு நாங்கள் உடனடியாக விலகிச் செல்ல வேண்டும் என்று."

கடைசி ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 20 ஆயிரம் பேர் இறந்திருக்கலாம் என தமிழ்வாணி கூறுகின்றனர். ஆனால், உயிரிழந்தவர்களின் உண்மையான, சரியான எண்ணிக்கையைக் கணக்கிட முடியாது என ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது.

ஆனால், சாட்சிகளிடம் இருந்து தாம் பெற்றுக்கொண்ட கணக்குகளின்படி தமிழ்வாணி கூறுவது சரியானதுதான் எனத் தெரிவிக்கிறது உலகத் தமிழர் பேரவை.

கடைசி குண்டுத் தாக்குதல்களின் பின்னர், படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த லட்சக்கணக்கான மக்களுடன் சேர்ந்து தமிழ்வாணியும் வந்திருந்தார். அவர் உடனடியாக அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டார்.

"நாங்கள் நகர்வதற்கு தொடங்கினோம். சுமார் ஒரு மணிநேரம் அல்லது அதற்கும் மேல் நடந்ததன் பின்னர் சிறிலங்காப் படையினரை நாங்கள் கண்டோம். வாருங்கள், நீங்கள் இப்போது பாதுகாப்பாக இருக்கிறீர்கள், உங்களுக்கு உணவும் தண்ணீரும் தரப்படும் என்று அவர்கள் சொன்னார்கள். எங்கும் உடலங்கள் சிதறிக் கிடந்தன. துண்டு துண்டுகளாகவும் சிதறிக் கிடந்தன. அவற்றுக்கு நடுவே நாங்கள் நடந்து வந்தோம். அங்கேதான் தனது இறந்துபோன குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நின்ற தாயை தமிழ்வாணி கண்டார்.

உடலங்களை அடக்கம் செய்வதற்கு எவருக்கும் நேரம் இருக்கவில்லை. சிலர் அவற்றை பதுங்கு குழிகளுக்குள் தள்ளிவிட்டு அதன் மேல் கொஞ்சம் மண்ணை அள்ளிப் போட்டு மறைத்தார்கள். அதுதான் அவர்களால் செய்ய முடிந்த மிகச் சிறந்த விஷயமாக அப்போது இருந்தது.

அந்த இரவு அவர்கள் அனைவரும் பாடசாலை ஒன்றில் தூங்கினார்கள். அதன் பின்னர் பேருந்துகளில் வவுனியா நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கிருந்து அவரது தாயாருடன் பேசினார். "என்னை இங்கிருந்து வெளியே எடுங்கள் அம்மா என்று நான் சொன்னேன். அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிடவேண்டும் என்றிருந்தது எனக்கு. அத்துடன் என் தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது."

படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தமிழ்வாணி வந்த முதல் நாளில் எந்த உணவும் அவர்களுக்குக் கிடையாது. அத்துடன் அவருடன் இருந்தவர்களின் தொடர்புகளையும் அவர் இழந்துவிட்டிருந்தார். மேலும் பலருடன் சேர்ந்து ஒரு கூடாரத்திற்குள் அவர் உறங்கினார்.

போர்ப் பகுதிகளைவிட்டு பிரிந்து முகாம்களுக்கு வந்தால் அதன் நிலைமை அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

"நீங்கள் எங்கே போனாலும் அங்கு பெரியதொரு வரிசை நின்று கொண்டிருக்கும். உங்களுக்கு என்ன வேண்டும் என்றாலும் வரிசையில் நின்றாக வேண்டும். அது எவ்வளவு அருவருப்பாக இருந்தது என்பதை என்னால் விளக்க முடியவில்லை. மக்களுக்கு எல்லா வகையான வருத்தங்களும் வந்தன.

"மக்கள் தமது சொந்தங்களை இழந்தனர்...... பலர் குடும்பங்களில் இருந்து பிரித்தெடுத்துச் செல்லப்பட்டனர்...... அத்துடன் மக்கள் மிகச் சோர்வடைந்தார்கள்."

கொலைகளும் பாலியல் வன்புணர்ச்சிகளும் அங்கு நிகழத் தொடங்கின. மக்கள் காணாமல் போனார்கள். சிலர் தற்கொலை செய்துகொண்டார்கள். ஒரு ஆசிரியை மரத்தில் தூக்குப் போட்டுத் தொங்கிக் கொண்டிருந்தபடி கண்டுபிடிக்கப்பட்டார்.

படைத்துறை புலனாய்வாளர்கள் முகாம்களைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். முன்னாள் போராளிகளைக் கண்டறிவதற்காக.

"அது ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலை. நீங்கள் சுதந்திரமாக நடக்கலாம். ஆனால் சிறைகளுக்கு உள்ளேயே நீங்கள் இருக்கிறீர்கள். அதை விட்டு வெளியே செல்ல நீங்கள் அனுமதிக்கப்பட மாட்டீர்கள். உங்களால் முடியாது. காவலர்கள் எல்லா இடங்களிலும் நின்றிருப்பார்கள். அத்துடன் சோதனை நிலையங்களும் இருக்கும்."

தமிழ்வாணி முகாமுக்கு வந்து சில நாட்கள் கழித்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதரகம் மூலமாகஇங்கிலாந்துதூதரகம் அவரைத் தொடர்பு கொண்டது. அவரது பெற்றோரும் 'த கார்டியன்' நாளேடும் மேற்கொண்ட நடவடிக்கைகளை அடுத்து இது நிகழ்ந்தது.

அதன் பின்னர் அவர் மேனிக் முகாமின் இரண்டாம் வட்டாரத்தில் இருந்து முதலாம் வட்டாரத்திற்கு மாற்றப்பட்டார். இந்தப் பகுதியே வெளியிருந்து வருகை தருபவர்களுக்கு அரசால் காண்பிக்கப்படும் பகுதி.

10 நிமிடமே இருந்த பான் கி மூன்...

"ஐக்கிய நாடுகள் சபைக்கான பொதுச் செயலாளர் பான் கீ மூன் அங்கு வரும்போது நான் அங்கே இருந்தேன். அவர் அங்கே ஒரு 10 நிமிடங்கள்தான் இருந்திருப்பார். உடனடியாகவே திரும்பிச் சென்றுவிட்டார். முகாமுக்குள் அவர் ஏன் செல்லவில்லை? ஏன் மக்களைச் சந்தித்து கொஞ்ச நேரத்தைச் செலவிட்டு அவர்களின் பிரச்சினைகள் என்னவென்று கேட்கவில்லை? நான் நினைக்கிறேன் அவருக்கு அந்தப் பொறுப்பு இருந்தது என்று. அத்துடன், மக்களும் அவரிடம் இருந்து சிலவற்றை எதிர்பார்த்தார்கள். அவர்கள் அவரிடம் இருந்து நிறையவே எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் 10 நிமிடங்கள் மட்டுமே அங்கு இருந்தார். அவ்வளவுதான்."

தமிழ்வாணி சில நாட்கள் முகாமில் தங்கி இருக்க வேண்டும் என்றும் அதன் பின்னர் அவர் விடுவிக்கப்படுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். "அதன் பின்னர் 48 மணிநேரம் மூன்று நாட்களாக மாறியது. பின்னர் வாரங்களாக மாதங்களாக அது மாறியது. அப்போது நான் நினைத்தேன், சரி இனி இது நடக்கப் போவதில்லை என்று." அவர் அங்கு என்ன செய்து கொண்டிருந்தார் என்பது பற்றியும்
மருத்துவமனை [^]யில் என்ன செய்துகொண்டிருந்தார் என்பது பற்றியும் ஐந்து தடவை அவர் அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

கடந்த வாரத்தில் அவரை அழைத்த அதிகாரிகள் அவர் வீட்டிற்குச் செல்லாம் எனத் தெரிவித்திருந்தனர். அரச தலைவரின் சகோதரர் பசில் ராஜபக்சவைச் சந்திப்பதற்காக அவர் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

"நீங்கள் விடுதலை செய்யப்படுகிறீர்கள், உங்களது குடும்பத்துடன் இணைந்து கொள்ளலாம். மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றார் பசில் ராஜபக்சே." அதன் பின்னர் தமிழ்வாணிஇங்கிலாந்துதூதரக அதிகாரிகளிடம் ஒப்படக்கப்பட்டார்.

"மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய முடிந்தது குறித்து நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன். நான் இங்கிலாந்தில் இருக்கின்றேன் என்பது உண்மையல்ல என்று இப்போதும் எண்ணிக்கொண்டிருக்கிறேன்....... நான் உயிருடன் இருப்பேன் என்றோ
இங்கிலாந்து [^]க்குத் திரும்பி வருவேன் என்றோ நான் எண்ணி இருக்கவே இல்லை. முகாமில் இருக்கும்போது கூட அப்படி எண்ணவில்லை என்கிறார் தமிழ்வாணி.


Thursday, September 17, 2009

போராட்டத்தின் இன்றைய வடிவமே நாடு கடந்த அரசாங்கம்''-பகுதி 2

சென்னை: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாக எழும் பல்வேறு கேள்விகளுக்கு பதில் தரும் வகையில் 15 கேள்வி- பதில்கள் அடங்கிய விளக்க அறிக்கையை விடுதலைப் புலிகள் அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன் இரண்டாம் பாகம் இது.

5. நாடு கடந்த அரசு அமைக்கும் முயற்சியைப் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர் ஏன் முன்னெடுக்க வேண்டும்?. அவர்களுக்குத் தமிழீழ அரசியல் விடுதலையில் உள்ள பங்கு யாது?
.

இன்றைய சூழலில் புலம்பெயர் தமிழர் மட்டுமே தமிழீழத் தமிழரது அரசியல் வேட்கைகளை முன்னெடுத்துச் செல்லும் நிலையில் இருக்கின்றனர். இது ஈழத் தமிழருக்கு வலுச்சேர்க்கின்ற காரணியகவே உள்ளது. 21ம் நூற்றாண்டின் அரசியல் உண்மைநிலை நாடுகடந்த அரசியலாகவே உருமலர்ச்சி பெற்று வருகிறது.

புலம்பெயர்ந்து அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்து வருகின்ற அயர்லாந்து மக்கள் வடஅயர்லாந்து மக்கள் போராட்டத்திற்கு உறுதியானதும் வெளிப்படையானதுமான ஆதரவை வழங்கினர். புலம்பெயர்ந்து வாழ்கின்ற யூத மக்கள் இந்நாள் வரை இஸ்ரேல் நாட்டை அரசியல் மட்டத்திலும் பொருளியல் அடிப்படையிலும் வலுப்படுத்தி வருகின்றனர். இன்னுமொரு தளத்தில் இத்தாலி, எல் சல்வடோர், எரித்திரியா, குரோசியா, மோல்டோவா முதலிய நாடுகள் புலம்பெயர்ந்து வாழும் மக்களைத் தமது சொந்த நாட்டு அரசியலின் தவிர்க்கமுடியாக உறுப்பாக ஏற்றுள்ளன.

இத்தாலிய நாடாளுமன்றத்திற்கு புலம்பெயர்ந்த இத்தாலிய மக்கள் நான்கு உறுப்பினரைத் தெரிவு செய்கின்றனர். புலம்பெயர்ந்து வாழும் கெயிட்டி மக்களுக்காக கெயிட்டியில் ஒரு தனித் தேர்தல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் பாதிக்கு மேலானவை இரட்டைக் குடியுரிமையை ஏற்றுக் கொண்டுள்ளன. இவை அனைத்தும் புதிய நூற்றாண்டில் நாடு கடந்த அரசியலுக்குக் கிடைத்துள்ள முதன்மைக்குச் சான்று பகர்கின்றன. இப்பின்னணியில்தான் ஈழத்தமிழர்களின் நாடுகடந்த அரசுக்கான முயற்சியையும் நோக்க வேண்டும்.

தொடர்ச்சியாகத் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதம் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் வெளிநாடுகளுக்கு ஏதிலிகளாகப் புலம் பெயர்ந்து குடியேறினர். இன்னொரு பகுதி மக்கள் வடகிழக்குக்கு வெளியே இடம் பெயரக் கட்டாயப்படுத்தப் பட்டனர். எஞ்சியோர் போரினால் சிதைக்கப்பட்டு உள்ளுரில் பொருளியலில் திக்கற்றவர்களாகவும் அரசியல் அடிமைகளாகவும் சிறைக் கைதிகளாகவும் மாற்றப்பட்டனர்.

எனவே தாயகத்தில் ஈழத் தமிழர் தமது தன்னாட்சி உரிமையை வென்றெடுப்பதற்கான பேராட்டங்களை முன்னெடுப்பது புலம்பெயர் தமிழரது உரிமையும் கடமையுமாகும்.

6. நாடு கடந்த தமிழீழ அரசு எங்கே அமையும்?.அதன் தன்மை எவ்வாறு இருக்கும்? அதன் முதன்மையான பணிகள் யாவை?

அமைக்கப்படவிருக்கும் தமிழீழ அரசுக்கு ஏனைய முறைசார் அரசுகள் போல் ஒரு நாட்டின் நிலப்பரப்பினைத் தளமாகக் கொண்டதாகவோ அல்லது சட்டம் இயற்றுதல், பாதுகாப்பு, வரி அறவிடல் போன்ற முறைமையான அரசுச் செயற்பாடுகள் மூலம் தனது இறையாண்மையை நிலைநாட்டவோ தேவை ஏற்படாது.

தாயகத்தில் வாழும் மக்களது பாதுகாப்பு, விரிவுபடுத்தப்பட்டதும் விரைவுபடுத்தப்பட்டதுமான முழுமையான தன்னாட்சி உரிமைக்கான போராட்டம், சமூக பொருண்மிய, பண்பாட்டுச் செழுமை ஆகியவற்றைத் தனது முதன்மைக் குறிக்கோள்களாகக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசு செயற்படும். மேலும், புலம்பெயர் ஈழத் தமிழர் தாங்கள் வாழும் நாடுகளின் சட்டங்களுக்கு இசைவாகப் தம்மைப் வலுவுள்ள ஒரு சமூகமாகக் கட்டியெழுப்புவதற்கும் அதனூடாக அவர்களால் அடையக்கூடிய சமூக, பொருண்மிய, அரசியல் மேல் நிலையினைத் தாயக விடுதலைக்கான உந்து சக்தியாக மாற்றும் உயரிய செயற்பாட்டினையும் இவ்வரசு முன்னெடுக்கும்.

நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியினைத் தனது ஆள்புலமாக கொண்டிருக்காவிடினும் தனது குறிக்கோள்களை அடைய செயலணிகளையும் அதற்கான செயற்பாட்டு அலுவலகங்களையும் உலகளாவிய மட்டத்தில் பல்வேறு நாடுகளில் அவற்றின் சட்டவரம்புகளுக்கு அமைய உருவாக்கிச் செயற்படுத்தும்.

7. நாடு கடந்த தமிழீழ அரசுக்கு அனைத்துலக நாடுகள் ஒப்புதல் அளிக்குமா?. அவற்றின் ஒப்புதலின்றி அதன் திட்டங்களைச் சிறப்பாக முன்னெடுக்க முடியுமா?

முன்னரே குறிப்பிட்டது போல் நாடுகடந்த தமிழீழ அரசு என்பது ஒரு புதிய முயற்சியாகும். இத்தகைய முயற்சிக்கான மாதிரிகள் இதுவரை உருவாக்கப்படவில்லை. கடந்த காலத்தில் அரசியல் விடுதலைக்காக போராடிய பல சமூகங்கள் தங்களது நாட்டுக்கு வெளியே புகலிட அரசுகளை உருவாக்கிச் செயற்பட்டன.

புகலிட அரசுகள் இயங்குவதற்கு வலுவான புலம்பெயர் சமூகம் தேவையாக இருக்காது. ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசைப் பொறுத்தவரை அதற்கு மிகவும் வலுவான புலம்பெயர் சமூகமும் தெளிவான அரசியல் இலக்குகளும் உண்டு. அதேவேளை ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு ஈழத் தமிழரது அரசியல் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கான தேவையை வலியுறுத்தும் அனைத்துலக நாடுகளினதும் தோழமைச் சக்திகளினதும் தொடர்ச்சியான வற்புறுத்தல் எமக்கு மிகச் சாதகமான காரணிகளாக உள்ளன.

8. நாடு கடந்த தமிழீழ அரசு பற்றிய எண்ணக்கருவை தமிழீழ விடுதலைப் புலிகளது அதைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளர் திரு. செல்வராசா பத்மநாதன் அவர்களே முதலில் முன்வைத்தார். அப்படியாயின் இதனைத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் திட்டமாகக் கொள்ள முடியுமா?.

ஈழத் தமிழர் தன்னாட்சி உரிமைக்கான போராட்டம் கடந்த பல பத்தாண்டுகளாகப் பல்வேறு கட்டங்களையும் அணுகுமுறை மாற்றங்களையும் தாண்டி வந்துள்ளது. இக் காலகட்டத்தில் அரசியல் கோரிக்கைகளின் வடிவங்கள் மேலும் துல்லியமானதும் தீர்க்கமானதுமான நிலைக்கு முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளன. அதேபோன்று போராட்ட முறைகளும் அதற்கான தலைமைகளும் மாற்றம் பெற்றன.

வரலாற்றின் இயங்கியல் தன்மையானது ஈழத் தமிழர் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் காணப்பட்டதனையே இது வெளிப்படுத்துகின்றது. அதன் தொடர்ச்சியாகவே இன்றைய நிலைமையையும் நோக்க வேண்டியுள்ளது.

2000ம் ஆண்டுகளின் பிற் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருமைப்படுத்தப்பட்ட தலைமையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் ஸ்ரீலங்காவினதும் அதன் நட்பு நாடுகளினதும் கூர்மைப்படுத்தப்பட்ட ராணுவ மேலாண்மையால் வலுவிழக்கச் செய்யப்பட்டது. இங்கு வலுவிழக்கச் செய்யப்பட்டது ஒரு குறிப்பிட்ட போராட்ட வடிவமே தவிர விடுதலைப் போராட்டமல்ல. ‘செப்டம்பர் 11’ எனக் குறிப்பிடப்படும் துன்பியல் நிகழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்கா முன்னெடுத்த ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற கருத்தியலை ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர் போரின்பொழுது கடைப்பிடிக்க வேண்டிய மனிதாபினமான சட்டங்களுக்கும் மனித நாகரீகங்களுக்கும் முற்றிலும் புறம்பாக ஒரு போரைத் ஈழத் தமிழர் மீதும் அவர்கள் தாயகத்தின் மீதும் திணித்து 21ம் நூற்றாண்டின் பெருங்கேடான இனப் படுகொலையை நடத்தி முடித்துள்ளனர்.

இச்சூழ்நிலையில் ஈழத் தமிழரது தாயக விடுதலைக்கான போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான வரலாற்றுக் கடமை தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இம்முதன்மையான பங்களிப்பை உரிய காலகட்டத்தில் உரியமுறையில் செல்வராசா பத்மநாதன் அவர்கள் முன்மொழிந்தார்.

இன்றைய சூழலில் புதிய உலக அரசியல் ஒழுங்கைக் கவனத்தில் எடுத்து அனைத்துலக நாடுகளின் புவிசார் அரசியல் வலைப்பின்னல்களுக்கு ஊடாக பொருத்தமான புதிய அணுகுமுறைகளைப் பயன்படுத்தி ஈழத்தமிழரது தாயக விடுதலைக்கும் தன்னாட்சி உரிமைக்குமான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான கருத்தினை விடுதலைப் புலிகள் முன்மொழிந்து அதனைப் புலம்பெயர் தமிழர்களிடம் கையளித்ததன் மூலம் தமது வரலாற்றுக் கடமையைச் செய்துள்ளனர். அதனைப் புரிந்துகொண்டு ஈழத் தமிழர் அனைவரையும் ஒன்றிணைக்கும் அமைப்பாக நாடு கடந்த தமிழீழ அரசு செயற்படும். இது மேலிருந்து திணிக்கப்படும் அரசாக இருக்காது. முற்றாகக் கீழிருந்து மேல்நோக்கி கட்டியெழுப்பப்படுகின்ற ஒரு மக்களாட்சி அரசாக இருக்கும்.

நாடு கடந்த தமிழீழ அரசு வெளிப்படைத்தன்மையும் பொறுப்புத்தன்மையும் கொண்டதாக வடிவமைக்கப்படும். வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புத்தன்மையை ஊக்குவித்து மக்களுக்கு அரசின் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை ஒளிவுமறைவின்றி வழங்கும். மக்களாட்சி செயல்முறையூடாகப் புலம்பெயர் தமிழரால் தெரிவு செய்யப்படும் பேராளர்களால் இது ஆளப்படும். இவ்வரசு செயற்படவுள்ள முறைமை தொடர்பான கூடுதல் விளக்கங்களை நாம் விரைவில் அறியத் தருவோம்.

(தொடரும்..)


Wednesday, September 16, 2009

போராட்டத்தின் இன்றைய வடிவமே நாடு கடந்த அரசாங்கம்''

சென்னை: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாக எழும் பல்வேறு கேள்விகளுக்கு பதில் தரும் வகையில் 15 கேள்வி- பதில்கள் அடங்கிய விளக்க அறிக்கையை விடுதலைப் புலிகள் [^]அமைப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின் விவரம்:

நாடு கடந்த தமிழீழ அரசுத் திட்டம் அறிவிக்கப்படட பின்னர் பல்வேறு மட்டங்களிலும் இத் திட்டம் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள், விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது நல்ல ஒரு அறிகுறி. நமது அடுத்த காலடிக்கு அத்தியாவசியமானதும் கூட. ஆரோக்கியமான விவாதங்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதில்லை. மாறாகத் தெளிவினையே எற்படுத்தும்.

இப்போது வெளியிடப்படும் இந்த விளக்கம் நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பான கருத்துப்பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்த துணைபுரியும் என்று நம்புகிறோம்.

இந்த விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை தற்போது சிந்தனையில் உள்ள விஷயங்களே. இவற்றில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும் நாம் புரிந்து கொள்கிறோம். இதனால், தொடர்ச்சியாக மக்கள் அமைப்புக்களின் கருத்துக்களை உள்வாங்கி; அதற்கேற்ப தேவையான மாற்றங்களைச் செய்து திட்டத்தை நடைமுறைப் படுத்துவோம்.

இத் திட்டம் தொடர்பான தங்கள் கருத்துக்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நல்ல பல ஆலோசனைகளை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம்.

நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு:

1.நாடு கடந்த தமிழீழ அரசு என்றால் என்ன?

நாடு கடந்த தமிழீழ அரசு தமிழ் மக்களதுஅரசியல்வேட்கையை உயிர்ப்போடு பேணித் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி எனும் அடிப்படை உரிமைக் கோட்பாடுகளின் வழியாக தமிழீழ மக்களின்விடுதலைினை வென்றெடுப்பதற்கான ஓர் அரசியல் அமைப்பாகும். இது ஒரு புதுமையான எண்ணக் கருவாகும்.

தமது தாயகத்தில் தமிழ் மக்கள் தமதுஅரசியல்வேட்கைகளையும் உரிமைககளையும் வெளிப்படுத்துவதற்கும் அதற்காகச் செயற்படுவதற்கும் இப்பொழுது எவ்வித வாய்ப்புகளும் இல்லை. இலங்கை அரசு சட்ட அடிப்படையான தடைகள், ராணுவ ஆக்கிரமிப்பு, படுகொலை ஆகிவற்றின் ஊடாகத் தமிழ் மக்களதுவிடுதலைவேட்கையையும் உரிமைகளையும் ஒடுக்கி வருகிறது.

இந்நிலையில் தமிழீழ நாட்டின் உறுப்பாகிய புலம் பெயர்ந்து வாழும் மக்களுக்கு உள்ள மக்களாட்சி வாய்ப்புக்களைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு செயலுருவம் கொடுப்பதற்காக பாடுபடும் அதியுயர்அரசியல்நடுவமாக இந்த நாடுகடந்த அரசு அமைக்கப்படுகிறது. தாயகத்தில் வாழும் அரசியல் தலைவர்களும் மக்களும் இந்த அரசில் பங்கு பெறுவது நடைமுறைச் சாத்தியமற்றது. எனவே இந்த அரசில் உறுப்புரிமை வகிக்கும் சார்பாளர்கள் புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களிடையே இருந்து மக்களாட்சி முறையில் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த அரசு இலங்கைத் தீவில் இருக்கும் நட்பு சக்திகளுடன் கைகோர்த்துப் பயணிக்கும்.

2. நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? அதற்கான தேவை என்ன?

ஈழத் தமிழர்களின் சமூக இருப்பு என்பது அவர்களின்அரசியல் பண்பாடு,
பொருளாதாரம் [^], வாழ்வியல் ஆகியவற்றின் தனித்துவத்தைத் தக்கவைப்பதிலும் உலகின் ஏனைய சமூகங்களுடன் இணைந்தும் அவற்றிற்கு ஈடாகவும் செயற்படுவதிலுமே தங்கியுள்ளது. இதனை நிலைநாட்டுவதற்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடிய காரணிகளைக் கட்டுப்படுத்தி வெற்றி கொள்வதற்கும் ஏதுவாக ஓர் உறுதியானதும் தன்னாட்சி உரிமையினைக் கொண்டதுமானஅரசியல்கட்டமைப்பு தேவையாகும். இத்தேவை 1976ல் வட்டுக்கோட்டைத் தீர்மானமாக வடிவம் பெற்று 1977ம் ஆண்டில் மக்கள் ஆணையாக உறுதிப்படுத்தப்பட்டது. 1985 திம்பு கோட்பாடுகள், 2003 இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைபு இதற்கு மேலும் வலுச் சேர்த்தன.

கடந்த 60 ஆண்டுகளாக இலங்கையின்அரசியல்கட்டமைப்பு தொடர்ச்சியாக ராணுவ மயப்படுத்தப்பட்டு இப்பொழுது மேலும் கூர்மைப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கள- பௌத்த வல்லாண்மை சமூகத்தினால் இயற்றப்பட்ட அரசியலமைப்பும் சட்டங்களும் ஏனைய தேசிய இனங்களின்; அடிப்படை உரிமைகளை மறுத்துள்ளன. இவை தமிழ் மக்களதும் பௌத்த சிங்களவர் அல்லாத ஏனைய சமூகங்களதும்; அரசியல் தனித்துவத்திற்கும் சமூக இருப்புக்கும் மற்றும் சுதந்திரமான பண்பாட்டு வளர்ச்சிக்கும் மிகப்பெரும் தடைக்கற்களாக இருக்கின்றன.

அத்துடன் தமிழ் மக்கள் தங்கள்அரசியல்வேட்கையைச் சுதந்திரமாகத் தெரிவிப்பதற்கும் அதற்காகக் குரலெழுப்பிப் போராடுவதற்கும் இலங்கைத் தீவின் உள்ளக நிலைமைகள் மிகப்பெரும் தடையாகவும் பேரச்சுறுத்தலாகவும் உள்ளன.

தீவில் வாழும் ஒட்டுமொத்த தமிழரும் அடிமைகளாகவும் திறந்தவெளிச் சிறைச்சாலைகளிற் கைதிகளாகவும் வாழ கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர். அதேவேளை சிங்கள அரசுத் தலைவர்களும் கொள்கை வகுப்பாளர்களும் அரசதந்திரிகளும் படைத் தளபதிகளும் இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதுவித சிக்கலும் இல்லை என்றும்அரசியல்தீர்வு தேவையற்றது எனவும் உள்நாட்டிலும் அனைத்துலக நாடுகள் மட்டத்திலும் பொய்ப் பரப்புரை செய்து வருகின்றனர்.

இவற்றை எல்லாம் எதிர்கொண்டு தமிழ்மக்களதுஅரசியல்தன்னாட்சி உரிமையை வென்றெடுப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை பல்வேறுபட்ட அணுகுமுறைகளைக் கையாண்டு முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழ்மக்களது கைகளில் வீழ்ந்துள்ளது. அதனை முன்னெடுப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்டதும் மக்களின் ஆணையைப் பெற்றதுமான ஒரு மக்களாட்சிக் கட்டமைப்பின் தேவை இன்று உணரப்பட்டுள்ளது. அதுவே நாடுகடந்த தமிழீழ அரசு எனத் இப்பொழுது முன்மொழியப்பட்டுள்ளது.

3. நாடு கடந்த அரசுக்கும் புகலிட அரசுக்குமிடையில் வேறுபாடுகள் உண்டா? அல்லது இரண்டும் ஒன்றேதானா?

இவ்விரண்டு அரசுகளுக்கும் இடையே பல பொதுப் பண்புகள் இருந்தாலும் கோட்பாட்டு அடிப்படையில் அவை வேறானவை.

புகலிட அரசு என்பது வெளிநாடுகளுக்கு தப்பியோடும்அரசியல்தலைவர்கள் தமக்கு ஆதரவு அளிக்கக்கூடிய நாடு ஒன்றில் தஞ்சம் புகுந்து அங்கு அமைக்கும் ஓர் அரசாகும். சொந்த நாடுவிடுதலைபெறும் பொழுது அவர்கள் நாடு திரும்புவர். புகலிட அரசை அமைக்க குறைந்தளவு ஒரு நாட்டின் ஒப்புதலும் ஏற்புதலும் தேவை. புகலிட அரசு செயற்படுவதற்குப் புலம் பெயர்ந்து வாழும் மக்கள் இருக்க வேண்டிய தேவையில்லை.

நாடு கடந்த அரசு பற்றிய கோட்பாடு கடந்த இரு பத்தாண்டுகளாக சமூக அறிஞர்களது கவனத்தை ஈர்த்து வருகிறது. அது புலம் பெயர்ந்து வாழும் மக்களது நாடு கடந்த வாழ்க்கை முறையோடும் நாடு கடந்த அரசியலோடும் தொடர்புள்ளது.

புலம் பெயர் மக்கள் தாம் வாழும் நாடுகளில் மட்டும் அல்லாது தமது தாயகத்தோடும் வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தம் மக்களோடும் உறவைப் பேணி வருகின்றனர். இவர்களது வாழ்க்கைமுறை தாம் வாழும் நாடுகளின் எல்லைகளுக்குள் சுருங்கி விடுவதில்லை. நாடுகள் கடந்த ஒரு சமூகமாக இவர்கள் தமது வாழ்க்கையை அமைத்துள்ளனர். தாம் வாழும் நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்ட முறையில் தமது வாழ்வை இவர்கள் அமைத்துக் கொண்டபொழுதும் இவர்களதுஅரசியல்சமூக பொருளாதார மற்றும் பண்பாட்டு பண்புகளைத் முடிவு செய்வதில் நாடு கடந்த சமூக வெளி முதன்மையான பங்கினை வகிக்கிறது. ஈழத் தமிழரது புலம் பெயர் வாழ்க்கையும் இவ்வாறே உள்ளது.

புலம் பெயர் தமிழ் மக்கள் மட்டுமல்லாது தாயகத்தில் வாழும் தமிழ் மக்களும் நாடுகடந்த தமது தொடர்புகளைப் பேணிய வண்ணம் உள்ளனர். எனவே அம்மக்களும் ஈழத்தமிழரது நாடு கடந்த சமூக வெளியின் உறுப்பாகவே உள்ளனர். ஈழத் தமிழரதுஅரசியல்இலங்கைத் தீவின் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்குள் சுருங்கி விடவில்லை. அவர்களது அரசியல் இப்பொழுது நாடு கடந்த அரசியலாகவும் மாற்றம் கண்டுள்ளது. பன்முகப்பட்டதும் சமூகநலன்மிக்கதும் மக்களாட்சி அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்டதுமான தேசியமே தமிழ்த் தேசியம் ஆகும்.

அமைக்கப்பட இருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசு நாடு கடந்த சமூக வெளியில் வாழ்ந்து வரும் தமிழீழ மக்களால் தமிழீழ மக்களதுஅரசியல்வேட்கைகளை வென்றெடுப்பதற்காக அமைக்கப்படுகிறது. மேலும் தாயகத்திலும் புலத்திலும் வாழும் தமிழீழ மக்களது சமூக, பொருளாதார, பண்பாட்டு மேம்பாட்டையும் இந்நாடு கடந்த அரசு அதன் ஆளுகைக்குள் கொள்ளும்.

மக்களால் மக்களில் தங்கி நிற்கக்கூடிய முறையில் இவ்வரசு அமைக்கப்படுவதால் இதற்கு நாடுகளின் ஒப்புதல் என்பது ஒரு முன் தேவையாக இருக்காது. தமிழ் மக்களிடையே உள்ள பொது அமைப்புகள் இவ்வரசினைத் தாங்கி நிற்கும் தூண்களாக இருக்க வேண்டும். மக்களில் தங்கி நின்றவாறே அனைத்துலக அரங்கில் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்களின் தேசியச் சிக்கலுக்குஅரசியல்தீர்வுகாண்பதற்கு அனைத்துலக நாடுகளினதும் மக்களினதும் ஆதரவை இவ்வரசு திரட்டும். மேலும் இவ் அரசு தமிழீழ நாட்டின்
விடுதலை [^]க்காகஅரசியல்மற்றும் அரசதந்திர வழிமுறைகள் ஊடாகப் போராடும்.

4. நாடு கடந்த அரசு உருவாகிவிட்டதா? இல்லையெனில் அது எவ்வாறு உருவாக்கப்படும்? நாடு கடந்த அரசை உருவாக்கும் பணி எவ்வாறு நடைபெறும்?

நாடு கடந்த அரசு இன்னும் உருவாகவில்லை. அதனை உருவாக்குவதற்கான நிறைவேற்றுச் செயற்குழு அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிறைவேற்றுச் செயற்குழுவின் உறுப்பினர்களில் இதன் இணைப்பாளரான திரு ருத்ரகுமாரனின் பெயர் மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு கடந்த அரசை உருவாக்குவதற்கான செயற்பாட்டுக் குழுவினை நாடுகள் தோறும் உருவாக்கும் பணிகள் இப்பொழுது நடைபெற்று வருகின்றன. இச்செயற்பாட்டுக் குழுவில் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ளோரை இப்பொழுது இணைத்து வருகிறோம். விரைவில் ஒவ்வொரு நாட்டுக்கும் உரிய செயற்குழு பற்றிய விளக்கங்களை அறிவிப்போம். இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள மதிவுரைக் குழு உருவாக்கற் செயற்குழுவுக்கு மதிவுரை வழங்குவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது.

இந்நாடுகள் தழுவிய செயற்பாட்டுக் குழுக்கள் தத்தமது நாடுகளில் தமிழ் அமைப்புக்களோடும் தமிழ் மக்களோடும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இந்தத் திட்டத்திற்கு ஆதரவு திரட்டும். தமிழரிடையே மட்டுமன்றி தமது நாடுகளில் உள்ள பொதுச் சமூகத்தின் ஆதரவையும் இவ்வரசை அமைக்கும் திட்டத்திற்குத் திரட்டும். மேலும் தத்தமது நாடுகளின்
அரசியல் [^] தலைவர்களதும் அரசுகளதும் ஆதரவை இந்நாடுகடந்த அரசு அமைக்கும் முயற்சிக்குத் திரட்டும் செயற்பாடுகளிலும் இச்செயற்குழு ஈடுபடும். முசுலிங்கள்;, இந்திய அறிவாளிகள் ஆகியோரை உள்வாங்கி மதியுரைக் குழு விரிவுபடுத்தப்படும்.

தமிழரிடையே இயங்கும் மக்கள் அமைப்புக்களது துணையோடும் நன்மதிப்புப் பெற்ற ஒரு நிறுவனத்தோடு இணைந்தும் ஓவ்வொரு நாட்டிலும் வாழும் ஈழத்தழிழ் மக்களது வாக்காளர் பட்டியல் ஆக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு உருவாக்கப்பெற்ற வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் அனைத்துலக நெறிமுறைகளுக்கு அமைய சுதந்திரமான
தேர்தல் [^] குழு அமைக்கப்பட்டுத் தேர்தல்கள் நடத்தப்பட்டு நாடு கடந்த அரசுக்கான மக்கள் பேராளர்கள் தெரிவு செய்யப்படுவர். தெரிவு செய்யப்படும் பேராளர்கள் தம்மை அரசியலமைப்பு அவையாக மாற்றிச் சட்டச் சிறப்புக் குழுவின் உதவியோடு மக்கள் அமைப்புகளின் பரிந்துரைகளை உள்வாங்கி நாடு கடந்த அரசு தொடர்பான யாப்பை எழுதுவர்.

(தொடரும்..)


Tuesday, September 15, 2009

சுதந்திரமான ஊடகங்களுக்கு எதிரான இலங்கை அரசின் ஒடுக்குமுறை'

சென்னை: 'இலங்கைத் தூதரகத்திடம் கைக்கூலி பெற்றுக் கொண்டு சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்துவிட்டார்கள் தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்கள் சிலர்' என்று கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர் தமிழகத்தின் முன்னணி செய்தியாளர் அமைப்பு.

ஈழத் தமிழர்களுக்கான கொடுமைகள், இலங்கையின் அடக்குமுறைகளுக்கு எதிராக செய்தி வெளியிட்ட செய்தியாளர் திசநாயகத்துக்கு இலங்கை
நீதிமன்றம் [^] வழங்கிய 20 ஆண்டுகால கடும் சிறைத் தண்டனை தீர்ப்பினை கண்டித்து 'சுதந்திரமான ஊடகங்களுக்கு எதிரான இலங்கை அரசின் ஒடுக்குமுறை' எனும் தலைப்பில் சென்னையில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.

தியாகராய நகர் வெங்கட் நாராயண சாலையில் அமைந்துள்ள தெய்வநாயகம் பள்ளியில் 'Save Tamil' என்னும் தகவல் தொழில்நுட்ப இளைஞர்களால் இக்கண்டனக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

திசநாயகத்துக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டுகால சிறைத் தண்டனையை உடனடியாக ரத்து செய்து அவருக்கு நிபந்தனை அற்ற விடுதலை வழங்கக் கோரியும், ஈழத் தமிழர்கள் அடைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்குள் அனைத்துலக ஊடகங்களை அனுமதிக்கக் கோரியும், சிங்கள அரசின் ஊடக ஒடுக்குமுறையைக் கண்டித்தும் இந்தியாவின் முன்னணி செய்தியாளர்கள் பலரும் கலந்துகொண்டு பேசினர்.

கூட்டத்தில் மூத்த பத்திரிக்கையாளர் ஏ.எஸ்.பன்னீர்ச்செல்வம் பேசியதாவது:

"சார்க் அமைப்பு ஒன்றை உருவாக்கும் ஆலோசனைக் கூட்டம் நடந்தபோது அப்போதையபாகிஸ்தான்அதிபர் ஜியா உல் ஹக்கைச் சந்தித்தார் இலங்கை அதிபர் ஜெயவர்த்தன. அப்போது அவரிடம் ஜியா, "உங்கள் நாட்டின் அரசியல் சாசனத்தை நான் படித்தேன். உலகில் வேறு எந்த நாடுகளின் ஆட்சியாளர்களுக்கும் இல்லாத அளவுக்கு கட்டற்ற சுதந்திரம் உங்களின் அரசியல் சாசனத்தில் இருக்கிறது. ஆனால் எல்லோரும் என்னை சர்வாதிகாரி என்கிறார்கள். உங்களை ஜனநாயகவாதி என்கிறார்கள்" என்றாராம்.

இதற்கு என்னிடம் ஆதாரம்கூட இருக்கிறது. அன்று ஜியா சுட்டிக்காட்டிய அதிகாரக் குவியமே இன்றுவரை இலங்கையில் சிறுபான்மை மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் இன்றைய நீதித்துறையில் முற்போக்காளராக தோற்றமளிக்கும் சில்வா உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த போதுதான் இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைக்கப்பட்ட வடக்கு- கிழக்கு இணைப்பு செல்லாது என்று அறிவித்தார்.

நீதித்துறையும் சர்வாதிகார இலங்கை அரசும் இணைந்து பயணித்து வந்ததன் விளைவே திசநாயகம் கைது. நாம் எல்லாம் திசநாயகத்துக்காய் குரல் எழுப்புவது ஒரு பக்கம் இருந்தாலும் மக்கள் இது குறித்து அக்கறையற்றவர்களாக இருந்தால் ஆகப் போவது ஒன்றும் இல்லை என்றார்.

மீண்டும் ஒரு ஈழப்போர்!:

'ஹெட்லைன்ஸ் டுடே' தொலைக்காட்சியின் இணை ஆசிரியர் ராஜேஷ் சுந்தரம் பேசியதாவது:

கேள்விகளற்ற நிலைதான் என்ன வேண்டுமாலும் செய்யலாம் என்ற நிலைக்குக் கொண்டு செல்கிறது.

இலங்கை போராட்டங்களை நாம் காந்தீய வழிகளில் முன்னெடுக்க முடியும். நாம் 'ஏர் லங்கா' அலுவலத்தில் போய் அங்கு வருகிற வாடிக்கையாளர்களிடம் நீங்கள் கொடுக்கிற பணத்தில் பெரும்பங்கு போருக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆகவே 'ஏர் லங்கா'வில் பயணம் செய்யாமல் வேறு வானூர்தி சேவைகளை நாடுங்கள் என்று இலங்கையில் வர்த்தக நலன்களை பாதிக்கிற அளவுக்கு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

இன்றைய இலங்கை அரசு இனி ஈழ மக்கள் எழ மாட்டார்கள் என நினைக்கிறது. நான் அங்கே எஞ்சியுள்ள போராளிகளோடும் தமிழ் மக்களோடும் தொடர்பில் இருக்கிறேன். அவர்கள் தங்கள் மக்கள் கொல்லப்படுவதையும் முட் கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதையும் இப்போதைக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஈழப்
போராட்டம் [^] முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. இலங்கை அரசு செய்து கொண்டிருக்கும் ஜனநாயகப் படுகொலைகள் மீண்டும் ஒரு ஈழப் போரை அந்த மண்ணில் உருவாக்கும் என்பது அந்த மக்களிடம் பேசிய மன நிலையிலிருந்து தெரிகிறது.

இந்திய அரசைப் பொறுத்தவரையில் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் தமிழ்நாட்டில் எழுந்த நெருக்கடிகளுக்காகச் சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக நடந்து கொண்டது.

நாங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அவர்களை பாதுகாக்க முயற்சிக்கிறோம் என்று தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்லி விட்டு இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்கியதோடு போரை முட்டுக்கொடுத்தும் நடத்தியதும் இந்தியாதான்.

இந்த அதிருப்தி எல்லோருக்குமே இருக்கிறது குறிப்பாக தமிழர்களான உங்களுக்கும் இருக்கிறது. திசநாயகம் கைதுக்காக மட்டுமல்ல ஒரு பெரிய போராட்டத்தையே இன்று நாம் ஜனநாயகத்துக்காய் நடத்த வேண்டிய தேவை எழுந்திருக்கிறது என்றார்.

'தி வீக்' இதழின் செய்தியாளர் கவிதா முரளிதரன்:

இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்தபோது தமிழ்நாட்டில் ஏராளமான போராட்டங்கள் நடந்தன. ஆனால் அவற்றுக்கு மதிப்பளிக்கும் மனநிலையில் ஆளும் தரப்பில்லை.

ஆனால் போருக்குப் பின்னர் மூன்று லட்சம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஊடகவியலாளர்கள் கொல்லப்படுகிறார்கள், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்கிற சூழலில் ஏதோ சாதித்து முடித்து விட்ட மாதிரி இங்கே அமைதியாக இருக்கிறார்கள்.

என்னதான் நாம் பேசினாலும் எழுதினாலும் தமிழ்நாட்டு மக்கள் போராடவில்லை என்றால் இலங்கையில் எதுவுமே நடக்கப் போவதில்லை. மக்கள் ஈழத் தமிழர்களின் வாழ்வுக்காக போராட முன்வரவேண்டும் என்றார்.

மூத்த எழுத்தாளரும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான தேவசகாயம் பேசிகையில்,

தென் ஆபிரிக்காவில் நிறவெறிக் கொள்கை கடைபிடிக்கப்பட்டது. உலக நாடுகள் அதன் மீது பொருளாதார தடைகளைக் கொண்டுவந்த போதும் தென் ஆபிரிக்கா அசைந்து கொடுக்கவில்லை.

ஆனால், அனைத்துலக விளையாட்டுக்கள் எதையும் நிறவெறிக் கொள்கை கடைப்பிடிக்கிற வரை தென் ஆபிரிக்காவில் நடத்தப் போவதில்லை என்று உலக நாடுகள் முடிவு எடுத்த பின்புதான் அது தன் நிறவெறிக் கொள்கையை மறு பரீசிலனை செய்தது. அதுபோல இலங்கையில்
கிரிக்கெட் [^]உள்ளிட்ட அனைத்துலக விளையாட்டுப் போட்டிகள் நடைபெறா வண்ணம் நாம் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுக்க வேண்டும். இலங்கை அரசுக்கு நாம் காட்டும் எதிர்ப்புகளில் இதுவும் ஒன்றாக இருக்க வேண்டும், என்றார்.

இந்திய- தமிழக உளவுத் துறை சதி...

'டெக்கான் குரோனிக்கல்' நாளேட்டின் செய்தியாளர் பீர் முகம்மது பேசுகையில்,

அமெரிக்காவின் முக்கியமான மருத்துவரும் மனித உரிமை ஆர்வலருமான டொக்டர் எலின் சாண்டஸ் இலங்கையில் உள்ள முகாம்களை ஜெர்மனியின் நாஜி முகாம்களோடு ஒப்பிட்டுள்ளார்.

அவர் வரும் 15 ஆம் நாள் தொடங்கி 20 ஆம் நாள் வரை இனப் படுகொலைக்கு எதிராக தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார்.

இதற்காக அவர் நியூயார்க்கில் இருக்கிற இந்திய தூதரகத்தில் விசாவும் பெற்றிருந்தார். ஆனால் தனது பிரச்சார பயணம் தொடர்பாக
தமிழ்நாடு [^] காவல்துறையிடம் பத்து நாட்களுக்கு முன்னர் அனுமதி கோரியிருந்தார்.

ஆனால், அவருக்கு பத்து நாட்களாக அதற்கான காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை என்பதோடு இந்த பத்து நாட்களில் நியூயார்க்கில் இருக்கிற இந்திய தூதரகம் அவருக்கு வழங்கியிருந்த விசாவை ரத்தும் செய்து விட்டது.

இதிலிருந்து தமிழ்நாட்டு காவல்துறையும் இந்திய உளவுத் த்துறையும் எப்படியெல்லாம் ஈழ மக்களுக்காக இங்கே பேசுவதை திட்டமிட்டு தடுக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இங்கே இருக்கிற மாநில முதல்வரோ அங்கே சுமூக நிலை நிலவுகிறது என்கிறார். இது வேதனையான பேச்சு என்றார்.

ஆங்கில ஊடகங்களுக்கு அக்கறையில்லை...

'நக்கீரன்' இதழின் உதவி ஆசிரியர் லெனின் பேசுகையில்,

போர் நடந்தபோது தமிழ் ஊடகவியலாளர்களும் பல்வேறு அரசியல் சக்திகளும் போர் நிறுத்தம் கேட்டு போராடினார்கள். ஆனால் ஆங்கில ஊடகங்கள் இதில் அக்கறை இல்லாமல் நடந்து கொண்டார்கள்.

உண்மையில் அவர்கள் நினைத்திருந்தல் இலங்கை விவகாரத்தில் ஏதாவது ஒரு நெருக்கடியை ஏற்படுத்த முடியும். அதிகார மையங்களுக்கு நெருக்கமான ஆங்கில ஊடகங்கள், குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் ஆங்கில ஊடகவிலாளர்கள் இன்னும் அதிக கவனம் எடுத்து இலங்கை விவாகரத்தில் செயல்பட வேண்டும் என்றார்.

'இலங்கை தூதரகத்தின் கைக்கூலிகள்...'

கார்ட்டூனிஸ்ட் பாலா பேசுகையில், இலங்கையில் உண்மைக்காக பேசிய ஊடகவியளார்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் உண்மை பேசக்கூடாது என்பதற்காக இலங்கை தூதுவர் அம்சாவிடம் சன்மானம் பெறும் ஊடகவியலாளர்களும் இருக்கிறார்கள்.

போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் அவர்கள் கொடுத்த அன்பளிப்புக்களுக்காக இனத்தையே காட்டிக் கொடுத்து துரோகம் செய்து விட்டார்கள். பல நேரங்களில் இதை நினைக்கும்போது அருவருப்பாக இருக்கிறது.

தமிழ் ஊடகவியலாளர்கள்தான் இப்படி என்றால்... ஆங்கில ஊடகங்களோ தமிழ்நாட்டு தமிழ் மக்கள் மீது ஒரு போரையே தொடுத்தன.

இலங்கை அங்கே தமிழர்களைக் கொன்றார்கள். இங்குள்ள ஆங்கில ஊடகவியளார்களோ போரின் முடிவை பெரும் வெற்றியாக கொண்டாடினார்கள்.

ஆனாலும் இலங்கை அரசின் அரசின் பாசிசப் போக்குக்கு எதிராகப் பேசவும் இதுபோன்ற ஊடகவியலாளர்கள் இருக்கிறார்கள் என்கிற மன நிம்மதி இருக்கிறது என்றார்.